சாத்துார்: சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரித்த 2 பேர் கைது

60பார்த்தது
சாத்தூர் அருகே சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த 2 பேர் கைது. பட்டாசு மற்றும் கருந்திரிகள் பறிமுதல். விருதுநகர் மாவட்டம், சாத்தூரை அடுத்த மேட்டமலை பகுதியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். சாத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன் உத்தரவின் பேரில் கள்ளத்தனமாக வெடி, கருந்திரி, தடுப்பு நடவடிக்கை எடுக்கும் விதமாக கடந்த சில நாட்களாக சாத்தூர் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் சாத்தூர் நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர்கள் வெள்ளைச்சாமி, பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் போலீசார் சாத்தூர், மேட்டமலை உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமப் பகுதியில் சோதனை நடத்தினார்கள். இதில் பலர் காட்டுப்பகுதியில் தகர செட் அமைத்து சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட இராதாகிருஷ்ணன், மூர்த்தி ஆகியோரிடமிருந்து 25 கிலோ பேன்சி ரக வெடிகள், கருந்திரி, ஒத்த வெடிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இவர்கள் மீது சாத்தூர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you