சாத்தூர் அருகே காட்டு பகுதியில் வைத்து சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த செய்த நபர் கைது. பட்டாசு மற்றும் கருந்திரிகள் பறிமுதல்.
விருதுநகர் மாவட்டம்,
சாத்துாரை அடுத்த உள்ள ஏழாயிரம்பண்ணை அருகே சேர்வைக்காரன்பட்டி காட்டு பகுதியில் சட்டவிரோதமாக பட்டாசு தயார் செய்த நபர் கைது. சாத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன் உத்தரவின் பேரில் கள்ளத்தனமாக வெடி, கருந்திரிகள் தயாரிப்பை தடுப்பு நடவடிக்கை எடுக்கும் விதமாக கடந்த சில நாட்களாக ஏழாயிரம்பண்ணை போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் தொடர்ந்து
நடவடிக்கை எடுக்கப்பட்டு
வருகிறது. இந்நிலையில் ஏழாயிரம்பண்னை காவல் நிலைய சார்பு ஆய்வாளர்
ஹரிராம் தலைமையில் போலீசார் ஏழாயிரம்பண்ணை, சேர்வைக்காரன் பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார கிராம பகுதியில் சோதனை நடத்தப்பட்டன. இதில் பலர் காட்டுப்பகுதியிலும், வீட்டின் பின் பகுதியிலும் தகர செட் அமைத்து சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட மார்க்கநாதபுரம் இந்திரா காலனியை சேர்ந்த மான்ராஜ் என்பது தெரிய வந்தன. மேலும் அவரிடமிருந்து பேன்சி ரக வெடிகள் கருந்திரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் மான்ராஜ் மீது ஏழாயிரம்பண்ணை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.