இராஜபாளையம்: லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது...

58பார்த்தது
இராஜபாளையம் அருகே தியேட்டர் முன்பாக தமிழக அரசால் தடைசெய்யபட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்த நபர் கைது. லாட்டரி சீட்டுகள் பறிமுதல்.
விருதுநகர் மாவட்டம்,
இராஜபாளையத்தில் மிகவும் பழமையான திரையரங்குகளில் ஒன்றான மீனாட்சி தியேட்டர் உள்ளன. இந்த பகுதியில் தெற்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் முத்துகுமரன் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது தியேட்டரின் அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டை இராஜபாளையம் கூரைப் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சந்திரசேகர் என்பவர் சட்ட விரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை ஈடுபடும் போது கையும் கழுவுமாக சார்பு ஆய்வாளர் முத்துகுமரன் பிடித்து சோதனை செய்ததில் நம்பர் லாட்டரி மற்றும் பிற மாநில லாட்டரி சீட்டுகள் இருந்ததை கைப்பற்றினர். பின்னர் தெற்கு காவல் நிலையத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி