பேட்டரிகள் ஏற்றிச்சென்ற லாரியில் திடீர் தீ விபத்து

71பார்த்தது
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரியில் திடீரென தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனேவிலிருந்து கோவைக்கு பேட்டரிகள் ஏற்றிச் சென்ற லாரியில் தீ பற்றியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், லாரியில் உள்ள டீசல் டேங்க் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

நன்றி: News18 Tamil Nadu

தொடர்புடைய செய்தி