பழனி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு புதிய சேவை

71பார்த்தது
பழனி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு புதிய சேவை
திண்டுக்கல் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு செல்லும் பக்தர்களிடம் சிறப்பு பூஜைகள் செய்து தருவதாகவும் கூறி சிலர் பணத்தை சுருட்டி வருவதாக கூறப்படுகிறது. இதனை தடுக்க கோயில் நிர்வாகம் சார்பில் கட்டணமில்லா தொலைபேசி சேவையை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி ‘1800 425 9925’ என்ற எண்ணிற்கு போன் செய்தால் பூஜைகள் நடைபெறும் நேரம், ரோப்கார் இயக்க நேரங்கள் போன்ற தகவல்கள் தெரிவிக்கப்படும். இந்த சேவை 24 மணி நேரமும் செயல்படும்.

தொடர்புடைய செய்தி