இராஜபாளையம்: கஞ்சா விற்ற 2 இளைஞர்கள் கைது...

70பார்த்தது
இராஜபாளையம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்கள் கைது. கஞ்சா பறிமுதல்.
விருதுநகர் மாவட்டம்,
இராஜபாளையத்திலிருந்து தென்காசி செல்லும் சாலையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலக முன்பாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவல் வந்தன. மேற்படி தகவலின் பேரில் தெற்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கெளதம் விஜய் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். ஆய்வில் இராஜபாளையம் மதுரை ராஜா கடை தெருவை சேர்ந்த விபிஸ் மற்றும் ஹரிகர ராஜா ஆகிய இளைஞர்கள் கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரிய வந்தன. மேலும் அவர்களிடமிருந்து 15 கிராம் கஞ்சா மற்றும் ரொக்க பணத்தை கைப்பற்றினர். மேற்படி இரண்டு பேர் மீது தெற்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி