விஜயகாந்த் பிறந்தநாள் தேமுதிக உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி

73பார்த்தது
அருப்புக்கோட்டை அருகே பொய்யாங்குளம் கிராமத்தில் தேமுதிக நிறுவன தலைவர் மறைந்த கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு தேமுதிக உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி; சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விஜயகாந்த் திருவுருவப்படத்திற்கு முன் விழுந்து வணங்கி மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பொய்யாங்குளம் கிராமத்தில் தேமுதிக நிறுவன தலைவர் மறைந்த கேப்டன் விஜயகாந்த் 72 வது பிறந்தநாளை முன்னிட்டு தேமுதிக சார்பில் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் விஜய பிரபாகரன் ஆணைக்கிணங்க, தேமுதிக மாவட்ட செயலாளர் ராமர் பாண்டியன் வழிகாட்டுதலின்படி, தேமுதிக மாவட்ட துணை செயலாளர் பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தேமுதிக நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் விஜயகாந்த் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விஜயகாந்த் திருவுருவப்படத்திற்கு முன் விழுந்து வணங்கினர்.

அதனைத் தொடர்ந்து தேமுதிகவில் இணைந்த பெண்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. மேலும் கேப்டன் விஜயகாந்த் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் தேமுதிக நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி