அருப்புக்கோட்டை அருகே கோவிலாங்குளம் ஊராட்சி இந்திரா காலனி பகுதியில் உள்ள மின்கம்பங்கள் சாய்ந்து கீழே விழும் நிலையில் உள்ளது. இதில் ஒரு சில மின் கம்பங்கள் இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் அளவு உடைந்து விடும் நிலையில் மழையின் நேரத்தில் தொட்டால் மின்சாரம் தாக்குமோ என்ற பொதுமக்கள் அச்சமடையும் நிலையில் காணப்படுகிறது. இப்பகுதியில் பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் முதியவர்கள் அதிகம் செல்கின்றனர். எனவே இது போன்று ஆபத்தை விளைவிக்கும் வகையில் உள்ள மின்கம்பங்களை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.