ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருக்கோவில் குத்துவிளக்கு பூஜை

83பார்த்தது
அருப்புக்கோட்டையில் நாடார்கள் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலில் இன்று ஆடி கடைசி வெள்ளி மற்றும் வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு சிறப்பு குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. ‌ இந்த குத்துவிளக்கு பூஜையில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு முறையான மந்திரங்கள் சொல்லி குத்து விளக்கை அர்ச்சித்து பூஜை செய்து அம்மனை வழிபட்டனர். இந்த சிறப்பு குத்துவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்கள் அனைவருக்கும் அம்மனின் அருட்பிரசாதம் வழங்கப்பட்டது. ‌ மேலும் ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டு மகிழ்ந்தனர்.

தொடர்புடைய செய்தி