2,915 நாட்டு வேப்ப மரக்கன்றுகள் இருப்பு

51பார்த்தது
2,915 நாட்டு வேப்ப மரக்கன்றுகள் இருப்பு
ஆனைமலையில், மண்ணுயிர் காத்த மன்னுயிர் காப்போம் என்ற திட்டத்தில், கோட்டூர் துணை விரிவாக்க மையத்தில், 2,915 நாட்டு வேப்ப மரக்கன்றுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.ஆனைமலை வட்டாரத்தில் உள்ள, 19 கிராமத்தை சேர்ந்த இயற்கை ஆர்வல விவசாயிகள், தங்களது நிலங்களின் சுற்றுப்பகுதிகளிலும், காலியிடங்களிலும் நட்டு பராமரிக்க இம்மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளன. மரக்கன்றுகள் வளர்ப்பதால், நகர கழிவுகள் மற்றும் தொழிற்சாலை கழிவுகளின் வெளியேற்றத்தால் காற்றில் ஏற்படும் நச்சு மாசுக்களின் பாதிப்பை தடுக்கிறது.

தொடர்புடைய செய்தி