பிரதமர் பிறந்த நாளை அரசு மருத்துவமனையில் கொண்டாடிய பாஜகவினர்

61பார்த்தது
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளை பாஜகவினர் உற்சாகமாக கொண்டாடினார். எம். எஸ். கார்னர் பகுதியில் பட்டாசு வெடித்து கொண்டாடிய பாஜகவினர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு பழங்கள் வழங்கினர். ராமசாமிபுரத்தில் கட்சி கொடி ஏற்றிய அரசு மருத்துவமனையில் மாவட்ட மகளிர் அணி துணை தலைவி ராஜலட்சுமி ஏற்பாட்டில் நரேந்திர மோடி ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பாஜகவினர் தன்னார்வலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு ரத்ததானம் அளித்தனர். நரேந்திர மோடியின் பிறந்த நாளில் பிறந்த குழந்தைகளுக்கு, பழங்கள் கர்ப்பிணி பெண்கள் பழங்கள் வழங்கினர். மேலும் அரசு மருத்துவமனை மற்றும் நகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களை சால்வை அணிவித்து கௌரவித்த பாஜகவினர் தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் பிரியாணி வழங்கி பாரத பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடினர். மாவட்டத் தலைவர் பாண்டுரங்கன் தலைமையில் மாவட்ட பார்வையாளர் வெற்றிவேல் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாவட்ட பொதுச் செயலாளர் சீதாராமன், நகரத் தலைவர் முருகானந்தம், நகரப் பொதுச் செயலாளர் பாண்டி, மாவட்ட துணை தலைவி ராஜேஸ்வரி, வடக்கு ஒன்றிய தலைவர் நாகராஜன், தெற்கு ஒன்றிய தலைவர் பூலோகராஜ் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி