அருப்புக்கோட்டை அருகே முற்றுகையிட்ட பொதுமக்கள்

69பார்த்தது
அருப்புக்கோட்டை அருகே முற்றுகையிட்ட பொதுமக்கள்
அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி ஊராட்சி முத்தரையர் நகர் பகுதியில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பல ஆண்டுகளாக கட்டங்குடியில் இருந்து குழாய் மூலம் வைகை குடிநீர் கொண்டு வரப்பட்டு அங்கு இரண்டு குழாய்கள் பொருத்தப்பட்டு அந்த குடிநீரை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போது அருப்புக்கோட்டை நகராட்சிக்கு குடிநீர் கொண்டு செல்வதற்காக குழாய்கள் பொருத்தும் பணியின் போது பாளையம்பட்டி முத்தரையர் நகர் பகுதிக்கு செல்லும் வைகை குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பல ஆண்டுகளாக அந்த குழாயில் குடிநீர் பிடித்து பருகி வந்த மக்கள் நேற்று பாளையம்பட்டி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாலசுப்பிரமணியன் இல்லத்தை முற்றுகையிட்டனர். ‌ நகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறை மற்றும் குடிநீர் வாரியத்துடன் உடனடியாக பேசி அங்கு புதிய குழாய் அமைத்து தண்ணீர் தங்கு தடை இன்றி கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக பாலசுப்ரமணியன் உறுதி அளித்ததை அடுத்து அங்கு இருந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர். ‌

தொடர்புடைய செய்தி