13 வயது மகளுக்கு தொல்லை: தந்தை கைது

78பார்த்தது
13 வயது மகளுக்கு தொல்லை: தந்தை கைது
கன்னியாகுமரி: இரணியல் அருகே கிராமத்தை சேர்ந்தவர் சசி (47). கூலி தொழிலாளி. காதல் திருமணம் செய்த இவருக்கு 13 வயதில் 9ஆம் வகுப்பு படிக்கும் மகள் உள்ளார். சசி தனது மகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி உள்ளார். இதை தாயிடம் சொன்னால் இருவரையும் கொன்று விடுவதாக மிரட்டி வந்துள்ளார். மனமுடைந்த சிறுமி, தனது தந்தையின் அத்துமீறல் பற்றி பாட்டியிடம் கூறியுள்ளார். பாட்டி குளச்சல் போலீசில் புகார் செய்தார். சசியை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி