கார் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து

1560பார்த்தது
கார் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து
அருப்புக்கோட்டை அருகே கட்ட கஞ்சம்பட்டியை சேர்ந்தவர் ராஜகார்த்திக்(34). இந்நிலையில் ராஜகார்த்திக் காரில் திருச்சுழி சாலையில்‌ பெத்தம்மாள் கோவில் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக ராஜகார்த்திக் ஓட்டிச் சென்ற கார் மீது மோதி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் கார் சேதமடைந்தது அதேபோல இருசக்கர வாகனத்தை ஒட்டி வந்த ராம்குமார் என்ற இளைஞர் காயமடைந்தார். இந்த விபத்து குறித்து ராஜ கார்த்திக் அளித்த புகார் அடிப்படையில் தாலுகா காவல் நிலைய போலீசார் நேற்று மார்ச் 21 அஜாக்கிரதையாக இருசக்கர வாகனம் ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்தியதாக ராம்குமார் மீது வழக்கு பதிந்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி