ஜெர்மன் ஆட்டோமொபைல் நிறுவனமான ஃபோக்ஸ்வேகன் தனது முதல் எலக்ட்ரிக் கார் 'ஐடி.4' இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் 'எலக்ட்ரிக் வாகன' பயணம் தொடங்கியது. இந்த கார் இந்த ஆண்டு சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என ஃபோக்ஸ்வேகன் பயணிகள் கார்களின் செயல் இயக்குநர் மைக்கேல் மேயர் தெரிவித்தார். இந்திய பயணிகள் வாகன சந்தை இந்த ஆண்டு 5-7 சதவீதம் வரை வளர்ச்சியடைய வாய்ப்புள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.