இருசக்கர வாகனம் மோதியதில் தாய் இரு மகன்கள் காயம்

66பார்த்தது
விழுப்புரம் அருகே மாதிரி மங்கலம் கிராமம் சென்னை மெயின்ரோட்டை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் ஜெயக்குமார். இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி (வயது 30). இவர்களது மகன் கள் கமலேஷ் (13), ஸ்ரீராம் (10) ஆகியோர் ஆவர். இந்த நிலையில் சம்பவத் தன்று தமிழ்ச்செல்வி, கமலேஷ், ஸ்ரீராம் ஆகியோர் தங்களது வீட்டின் முன்பு பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் இவர்கள் 3 பேரின் மீது எதிர் பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் பலத்த காயம் டைந்த அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக் காகமுண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஜெயக்குமார் கொடுத்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி