சேலம் மாவட்டத்தில் திருமண மண்டபத்தை வாடகைக்கு எடுத்த மோசடி கும்பல், ரூ.10க்கு சாப்பாடு வழங்குவதாக கூறியுள்ளது. அதனை நம்பி ஏராளமானோர் அங்கு குவிந்தனர். அவர்களிடம், பணம் முதலீடு செய்தால் 7 மாதங்களில் இரட்டிப்பாக கொடுக்கப்படும் என அந்த கும்பல் விளம்பரம் செய்தது. இதனால் பலர் ரூ.50,000 - ரூ.5 லட்சம் வரை பணம் கொடுத்துள்ளனர். இதனையறிந்த போலீசார் நடத்திய விசாரணையில், அந்த மோசடி கும்பல் ரூ.100 கோடி வரை பணத்தை அபேஸ் செய்தது தெரியவந்துள்ளது.