தக்கா வாய்க்காலை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

53பார்த்தது
தக்கா வாய்க்காலை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனுார் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் திருக்கோவிலுார் தென்பெண்ணை ஆறு வழியாகச் செல்கிறது. மேலும், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த அண்டராயநல்லுார் கிராமத்தில் உள்ள ராகவன் வாய்க்கால் வழியாகச் சென்று இப்பகுதியைச் சுற்றியுள்ள ஏரிகள் நிரம்புவது வழக்கம்.

அதேசமயம் அண்டராயநல்லுார் கிராமத்தில் ராகவன் வாய்க்காலை ஒட்டி கழிவுநீர் செல்ல தக்கா வாய்க்கால் அமைத்து பணப்பாக்கம், சின்னசெவலை, திருவெண்ணெய்நல்லுார் பேராட்சிக்குட்பட்ட 2வது வார்டு, அணைக்கட்டு சாலை வழியாக சென்று மகளிர் மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள மலட்டாற்றில் வாய்க்காலில் கலக்கிறது. பல ஆண்டுகளாக வாய்க்கால் பராமரிப்பு இன்றியிருப்பதால், பெரும்பாலான பகுதியில் தற்போது துார்ந்தும், அப்பகுதியில் உள்ளவர்கள் ஆக்கிரமிப்பும் செய்துள்ளனர்.

எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றி வரும் பருவமழைக்குள் வாய்க்காலை சீரமைத்து தண்ணீர் செல்ல வழிவகை செய்ய வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி