புதுப்பெண் தற்கொலை: ஆர்.டி.ஓ விசாரணை

83பார்த்தது
புதுப்பெண் தற்கொலை: ஆர்.டி.ஓ விசாரணை
மதுரை: மேலூர் அருகே பூஞ்சுத்தியை சேர்ந்தவர் நந்தகுமார் மனைவி ஜனனி (23). இவர்களுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. தம்பதியினர் தனி வீட்டில் வசித்து வந்துள்ளனர். நந்தகுமார் நேற்று முன்தினம் மதுரைக்கு வேலைக்கு சென்றுள்ளார். வீட்டில் தனியாக இருந்த ஜனனி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சந்தேக மரணமாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருமணமாகி 4 மாதமே ஆனதால் ஆர்டிஓ விசாரணை நடத்தினார்.

தொடர்புடைய செய்தி