அண்ணா பல்கலை.,க்கு வெடிகுண்டு மிரட்டல்

81பார்த்தது
அண்ணா பல்கலை.,க்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை கிண்டியிலுள்ள அண்ணா பல்கலை.,க்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். காவல்துறை நடத்திய விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்துள்ளது. கடந்த 2 மாதத்தில் 10 முறைக்கு மேல் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. மிரட்டல் விடுத்த நபர் குறித்து கோட்டூர்புரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சமீப காலமாக இதுபோன்ற மிரட்டல்கள் அதிகரித்துள்ளன.

தொடர்புடைய செய்தி