திருக்கோவிலூர் கோவில்களில் விநாயகர் சதுர்த்தி விழா

55பார்த்தது
திருக்கோவிலூர் கோவில்களில் விநாயகர் சதுர்த்தி விழா
திருக்கோவிலூர் ஏரிக்கரை மூளையில் உள்ள ஜெய கணபதி, விஜய கணபதி இணைந்த இரட்டை விநாயகர் கோவிலில் நேற்று காலை 6: 00 மணிக்கு கணபதி ஹோமம், மகா அபிஷேகம், 108 சங்காபிஷேகம், சிறப்பு அலங்காரத்துடன் ஷோடசோபவுபச்சார தீபாரதனை நடந்தது. மாலை 6: 00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் லட்சார்ச்சனை, இரவு 9: 00 மணிக்கு உற்சவர் மூஷிக வாகனத்தில் தீபாராதனை நடந்தது.


என். ஜி. ஜி. ஓ. , நகரில் உள்ள சக்தி வினாயகர் ஆலயத்தில் காலை 9: 00 மணிக்கு மூலவர் விநாயகருக்கு அபிஷேகம், வெள்ளி கவசத்தில் அலங்காரம், தீபாராதனை நடந்தது. மாலை 6: 00 மணிக்கு சந்தனகாப்பு அலங்காரத்தில் தீபாராதனை, அர்ச்சனை, சுவாமி வீதி உலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி