ரயில்வே இரும்பு பொருட்களை திருடிய வாலிபர் கைது

74பார்த்தது
ரயில்வே இரும்பு பொருட்களை திருடிய வாலிபர் கைது
திண்டிவனம் ரயில்வே பாதுகாப்பு படை சப் இன்ஸ்பெக்டர் தேசி தலைமையில் போலீசார் நேற்று அதிகாலை திண்டிவனம் - முண்டியம்பாக்கத்திற்கு இடையே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ரயில்வே பணிகள் நடைபெற்று வரும் இடத்திலிருந்த ரயில்வேக்கு சொந்தமான இரும்பு தளவாட பொருட்களை திருடிக்கொண்டிருந்த வாலிபரை பிடித்தனர். விசாரணையில், புதுச்சேரி மாநிலம், திருக்கனுார் அடுத்த கூனிச்சம்பட்டைச் சேர்ந்த ஏழுமலை மகன் பிரகாஷ், 27; என தெரியவந்தது. அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்து, அவர் ஓட்டி வந்த ஸ்கூட்டரை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி