புதுக்கோட்டையில் தமிழக வெற்றிக் கழகம் அலுவலகம் திறப்பு விழாவில் ‘விஜய்’ என்ற பெயரை உச்சரிக்காமல் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்.அதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அலுவலக திறப்பு விழாவிற்கு பல்வேறு மாவட்டத்தில் இருந்து வந்திருந்த தவெக-வினரை வரவேற்று அவர்களது பெயரை புஸ்ஸி ஆனந்த் வாசித்தார். அப்போது விஜய்யின் பெயரை அடைமொழியாக வைத்திருந்தவர்களின் பெயரை வாசிக்கும்போது "தளபதியின் பெயர் உடையவர்களே" என கூறினார்.