பைக் மீது லாரி மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

69பார்த்தது
பைக் மீது லாரி மோதல்: தொழிலாளி உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே திங்கள்கிழமை பைக் மீது லாரி மோதியதில் தொழிலாளி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். செஞ்சி வட்டம், பனப்பாக்கம், கன்னியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த சங்கா் மகன் சக்திவேல் (27), தொழிலாளி. இவா், திங்கள்கிழமை தனது பைக்கில் திண்டிவனம் - செஞ்சி சாலையில் வியூக்கம் அருகே சென்றுகொண்டிருந்தாா். அப்போது, எதிரே வந்த சரக்கு லாரி பைக் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சக்திவேல் நிகழ்விடத்திலேயே உயிரிந்தாா். இதுகுறித்து ரோஷணை போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி