ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

83பார்த்தது
ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திண்டிவனத்தில், ஓய்வு பெற்ற பள்ளி, கல்லுாரி ஆசிரியர் நலச்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தாலுகா அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் காமராஜ் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் மேரிவினோதினி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சண்முகம் வரவேற்றார். கோரிக்கையை வலியுறுத்தி, பேராசிரியர் பிரபா கல்விமணி, சங்க மாநில துணை தலைவர் தியாகராஜன் பேசினர். ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில், ஓய்வூதியர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை அளிக்க வேண்டும். அதிக கட்டணங்கள் வசூலிக்கும் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி