திண்டிவனத்தில் மூன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல்

84பார்த்தது
திண்டிவனம் அடுத்த சலவாதி பகுதியில் உள்ள ஒரு ரைஸ் மில்லில் நல்ல அரிசி உடன் ரேஷன் அரிசி கலந்து விற்பனை செய்வதாக குடிமைபொருள் குற்ற புலனாய்வுதுறைக்கு ரகசிய தகவல் வந்தது தகவலின்படி குடிமைபொருள் குற்ற புலனாய்வுதுறை உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் திண்டிவனம் அடுத்த சலவாதியில் உள்ள ரைஸ் மில்லில் ஆய்வு செய்த போது அங்கு நல்ல அரிசியுடன்
ரேஷன் அரிசியை பாலீஷ் செய்து கலந்து விற்பனைக்கு அனுப்புவதற்கு 25 கிலோ பைகளில் பேக்கிங் செய்து வைத்திருப்பதும்
கோழி தீவனத்திற்காக ரேசன் அரிசியை தயார் செய்திருப்பதும் தெரியவந்தது இதனையடுத்து போலீசார் வருவதை கண்டு அங்கிருந்து நபர்கள் தப்பி சென்று விட்டனர். அங்கிருந்த மூன்று டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து குடிமைப் பொருள் குற்ற புலனாய்வு துறை போலீசார் ரேஷன் அரிசியை ஆய்விற்காக திண்டிவனம் நுகர் பொருள் வாணிப கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர்
மேலும் ரேஷன் அரிசியை கலப்படம் செய்து விற்பனை செய்த ரைஸ் மில் உரிமையாளரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி