ஒரு வழியா மழை வரப்போகுது.. குளிர்ச்சி செய்தி

18226பார்த்தது
ஒரு வழியா மழை வரப்போகுது.. குளிர்ச்சி செய்தி
தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக வெப்ப அலைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலை 100 டிகிரியைத் தாண்டியது. அதிகப்படியான வெப்பத்தால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். இந்நிலையில் வானிலை மையம் மக்களின் வாட்டத்தைப் போக்கும் வகையில் குளிர்ச்சி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று (ஏப்ரல் 26) தென்தமிழகம், கன்னியாகுமரி, நெல்லை பகுதிகளிலும் மேற்குத் தொடர்ச்சி மழை மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.