மினி லாரியில் திடீர் தீ வாகன ஓட்டிகள் பதட்டம்

1089பார்த்தது
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ஜக்காம் பேட்டை பகுதியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகம் எதிரே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மனி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று அந்த லாரியிலிருந்து தீ பற்றி புகை முட்டம் ஏற்பட்டது.

இதனால் பதட்டமடைந்த லாரி ஓட்டுநர் உடனவே வண்டியை நிறுத்தி கீழே இறங்கினார். அவ்வழியே வந்த மற்றொரு லாரி ஓட்டுநர் இதுகுறித்து திண்டிவனம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தார்.இந்த தகவலயைடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீ லாரி முழுவதும் பரவாமல் தண்ணீரை பீச்சி அடித்து அணைத்தனர்.

மினி லாரியின் சைலன்ஸரில் ஏற்பட்ட வெப்பத்தின் காரணமாக தீப்பிடித்தது தெரிய வந்தது. இந்த தீவிபத்தில் சைலன்ஸரை ஒட்டி அமைந்துள்ள பேட்டரி முழுவதுமாக எரிந்து சாம்பலானது. சரியான நேரத்தில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி