திரௌபதி அம்மன் கோவில் கொடியேற்றம் திடீர் நிறுத்தம்

52பார்த்தது
விழுப்புரம் மாவட்டம்,
மரக்காணத்தில் திரெளபதி அம்மன் கோவில் திருவிழாவிற்கு கொடியேற்ற தடை- 300க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு*


விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மேட்டுத்தெரு பகுதியில் 150 ஆண்டு பழமை வாய்ந்த திரௌபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது உள்ளது. இதில் பல்வேறு சமுதாயத்தை சார்ந்தவர்கள் 21 நாள் திருவிழாவை நடத்தி வருவது வழக்கம். கடந்தாண்டு இக்கோவிலை இந்து சமய அறநிலைத்துறை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததால் கோவில் நிர்வாகிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கிற்கு கடந்த வாரம் பழைய முறைப்படி திருவிழா நடத்தலாம் என உத்தரவு வந்திருந்த நிலையில் கோவில் நிர்வாகிகள் இன்று கொடியேற்றுவதற்காக இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலரிடம் மனு அளித்தனர். ஆனால் செயல் அலுவலர் பல்வேறு காரணங்களை கூறி கொடியேற்ற வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தினால் மரக்காணம் பகுதி பொதுமக்களிடையே பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் விழுப்புரம், கடலூர், மாவட்டங்களில் இருந்த 300க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மரக்காணம் முழுவதும் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் மரக்காணம் பகுதி பரபரப்புடன் காணப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி