பொன்மாணிக்கவேல் முன்ஜாமின் மனு - நாளை தீர்ப்பு

65பார்த்தது
பொன்மாணிக்கவேல் முன்ஜாமின் மனு - நாளை தீர்ப்பு
சிலைக்கடத்தல் வழக்கில் முன்ஜாமின் கோரிய முன்னாள் ஐஜி பொன்மாணிக்கவேல் வழக்கில் நாளை (ஆகஸ்ட் 30) தீர்ப்பு அளிக்க உள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவித்துள்ளது. சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனுக்கு உதவியதாக, சி.பி.ஐ.,பதிந்த வழக்கில், முன் ஜாமின் கோரி பொன்மாணிக்கவேல் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இதையடுத்து, இரு தரப்பு வாதங்கள் முடிவுற்ற நிலையில், தீர்ப்பு நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி