
செஞ்சி அருகே பேருந்து போக்குவரத்தை தொடங்கி வைத்த மு.அமைச்சர்
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டம், எதப்பட்டு ஊராட்சியிலிருந்து மன்சுராபாத், வேடந்தவாடி, மங்கலம் வழியாக திருவண்ணாமலை வழி தடத்தில் ஒரு பேருந்து மற்றும் எதப்பட்டு ஊராட்சியிலிருந்து மன்சுராபாத், பொத்தாரை, ராந்தம் வழியாக போளூர் வழி தடத்தில் ஒரு பேருந்து சேவையை கொடியசைத்து மு. அமைச்சர் மஸ்தான் துவக்கி வைத்தார். உடன் போக்குவரத்து கிளை மேலாளர், ஒன்றிய திமுக செயலாளர், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் சாந்தி சுப்பிரமணி, செல்வி ராமசரவணன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.