கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் 10 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற மாசி மகத் திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். இதில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த உடைமைகள், பிளாஸ்டிக் பேப்பர் என குப்பைகள் தேங்கியது. இந்த நிலையில் விருத்தாச்சலம் மணிமுக்தா நதிக்கரையில் உள்ள குப்பைகளை அகற்றக்கோரி, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மாவட்ட செயலாளர் கதிர்காமன் கழுத்துவரை உடலை மண்ணுக்குள் புதைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.