செஞ்சி அருகே விதிமீறல் ஓட்டுநா் பயிற்சிபள்ளி வாகனம் பறிமுதல்

71பார்த்தது
செஞ்சி அருகே விதிமீறல் ஓட்டுநா் பயிற்சிபள்ளி வாகனம் பறிமுதல்
செஞ்சி மற்றும் சேத்பட்டில் தனியாா் வாகன ஓட்டுநா் பயிற்சி பள்ளி உள்ளது. இப் பள்ளியில் 6 மாணவா்களுக்கு மட்டுமே பயிற்சி அளிக்க அரசு பெறப்பட்டுள்ளது. ஆனால் கடந்த சில நாள்களாக 12 மாணவா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அபாயகரமான வளைவு மற்றும் போக்குவரத்து மிகுந்த சாலையில் ஆபத்தை உணராமல் மாணவா்களுக்கு பயிற்சி அளித்துள்ளனா். இதையடுத்து, திண்டிவனம் வட்டார போக்குவரத்து அலுவலா் முக்கண்ணன் உத்தரவின் பேரில், செஞ்சி மோட்டாா் வாகன ஆய்வாளா் முருகவேல் நேரில் ஆய்வு செய்து பயிற்சி வாகனத்தை பறிமுதல் செய்து செஞ்சி காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். மேலும் பயிற்சிப் பள்ளிக்கான உரிமம் தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளாா்.

தொடர்புடைய செய்தி