செஞ்சி ஒன்றிய சேர்மன் விஜயகுமார் - செண்பகப்பிரியா தம்பதி மகள் லோகஸ்ரீ மஞ்சள் நீராட்டு விழா நேற்று மாலை செஞ்சி வள்ளி அண்ணாமலை திருமண மண்டபத்தில் நடந்தது. விழாவில், எம். எல். ஏ., க்கள் மஸ்தான், சிவக்குமார், ஆரணி எம். பி. தரணிவேந்தன், முன்னாள் எம். எல். ஏ., க்கள் மாசிலாமணி, சேதுநாதன், சீத்தாபதி சொக்கலிங்கம், செந்தமிழ்ச்செல்வன், தலைமை தீர்மான குழு உறுப்பினர் சிவா. இளைஞர் அணி அமைப்பாளர் ஆனந்த், பேரூராட்சி சேர்மன் மொக்தியார், ஒன்றிய சேர்மன்கள் மேல்மலையனுார் கண்மணி நெடுஞ்செழியன், வல்லம் அமுதா ரவிக்குமார், யோகேஸ்வரி மணிமாறன், சொக்கலிங்கம், தயாளன். முன்னாள் சேர்மன் ரங்கநாதன், மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, விவசாய அணி அமைப்பாளர் கணேசன் மற்றும் ஒன்றிய செயலாளர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பங்கேற்றனர்.