உ.பி: கணவனை இழந்த அஞ்சலி (28) சிவேந்திரா என்பவரிடம் நிலம் வாங்க ரூ.6 லட்சம் கொடுத்துள்ளார். இந்நிலையில், நில பத்திரத்தை வழங்காமல் மோசடி செய்த சிவேந்திராவுக்கும் அஞ்சலிக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சிவேந்திரா தனது கூட்டளியுடன் சேர்ந்து அஞ்சலிக்கு வலுக்கட்டாயமாக மதுகொடுத்து கழுத்தை நெரித்து கொன்றுள்ளனர். அதன்பின் அவரது உடலை எரித்து யமுனை ஆற்றில் வீசியுள்ளனர். அஞ்சலியின் பாதி எரிந்த உடலை கைப்பற்றிய போலீசார் சிவேந்திராவையும் அவரது கூட்டாளியையும் கைது செய்தனர்.