விக்கிரவாண்டி இடைத்தேர்தல்- மாவட்ட தேர்தல் அதிகாரி பழனி பேட்டி

79பார்த்தது
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்- மாவட்ட தேர்தல் அதிகாரி பழனி பேட்டி
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவுக்கான முன்னேற்பாட்டு பணிகள் சிறப்பாக நடைபெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான பழனி தெரிவித்துள்ளார். மேலும் அவர், "நாளை நடைபெற உள்ள வாக்குப்பதிவில், 2,37,031 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 276 வாக்குச்சாவடி மையங்களில் 662 வாக்குப்பதிவு கருவிகளும் 330 கட்டுப்பாட்டு கருவிகளும் மற்றும் 357 வாக்குப்பதிவினை உறுதி செய்யும் கருவிகள் என மொத்தம் 1349 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன" என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி