வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் மாசி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு இன்று அதிகார நந்திபகவானுக்கு பால், தயிர், தேன், பன்னீர் சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் வில்வ இலைகள் அருகம்புல் மலர் மாலைகள் ஆகியவைகளை கொண்டு சிறப்பு அலங்காரங்களை செய்து மகா தீபாராதனைகளும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர்.