வாக்கு எண்ணிக்கை முடியும் வரை ட்ரோன்கள் பறக்க தடை

52பார்த்தது
வேலூர் மாவட்டம்.

வாக்குபதிவு மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் அரசு தொழில் நுட்ப கல்லூரி வளாகம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வாக்கு எண்ணிக்கை முடியும் வரை ட்ரோன்கள் பறக்க தடை காவல்துறை அறிவிப்பு.

வேலூர் மாவட்டத்தில் கடந்த 19. 04. 2024 ஆம் தேதி நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் வேலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 1. வேலூர், 2. அணைகட்டு, 3. கே. வி. குப்பம், 4. குடியாத்தம், 5. ஆம்பூர், 6. வாணியம்பாடி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு இயந்திரங்கள் வேலூர் தொரப்பாடியில் உள்ள தந்தை பெரியார் அரசு தொழில் நுட்ப கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

மேலும் பாதுகாப்பு கருதி வாக்குபதிவு மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் அரசு தொழில் நுட்ப கல்லூரி வளாகம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வருகின்ற 04. 06. 2024 ஆம் தேதி வாக்கு எண்ணிகை முடியும் வரை ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதை மீறும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி