அரக்கோணம் பழனிபேட்டையில் போண்டா கடை நடத்தி வந்த ராமு என்பவர் செல்போனில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் கடன் தொல்லை ஏற்பட்டதால் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் அதிகளவு நஷ்டம் ஏற்பட்டதை தொடர்ந்து தனியார் வங்கிகள் மற்றும் தெரிந்தவர்களிடம் ரூ.10 லட்சம் கடன் வாங்கிய நிலையில் அதனை திருப்பிக் கேட்டபோது கடனை திருப்பி தரமுடியாததால் மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.