நீச்சல் பழக முயற்சித்து உயிரிழந்த சிறுவன்

52பார்த்தது
நீச்சல் பழக முயற்சித்து உயிரிழந்த சிறுவன்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள சானா குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி சுகன்யா. இவர்களுக்கு க்ரிஷ் (12), சாய் (10) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். பள்ளி விடுமுறை என்பதால் இவர்களுக்கு சொந்தமான விவசாய கிணற்றில் கடந்த சில நாட்களாக பலரும் குளித்து வந்துள்ளனர். இந்த நிலையில், இன்று தனது நண்பர்களுடன் நீச்சல் பழகுவதற்காக க்ரிஷ் மற்றும் சாய் ஆகியோர் சென்றுள்ளனர். அப்போது சாய் நீச்சல் பழக்க வேண்டும் என்று பிளாஸ்டிக் கேனை கட்டி உள்ளே சென்றுள்ளார். அப்போது கேன் உடைந்து சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார். தீயணைப்பு வீரர்கள் வந்து சிறுவனின் உடலை கைப்பற்றினர்.

தொடர்புடைய செய்தி