நிலக்கரி துகளில் சறுக்கி விபத்து.. போலீசார் எச்சரிக்கை

85பார்த்தது
நிலக்கரி துகளில் சறுக்கி விபத்து.. போலீசார் எச்சரிக்கை
காரைக்காலில் சாலைகளில் கொட்டிய நிலக்கரி துகள்களில் சறுக்கி இரு சக்கர வாகனங்கள் விழுந்த விவகாரத்தில் விதிகளை மீறி நிலக்கரி ஏற்றி வந்த 21 லாரிகள் மீது போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதானி துறைமுகத்தில் இருந்து நிலக்கரி ஏற்றியிருந்த சரக்கு லாரிகளை போலீசார் ஆய்வு. லாரிகள் முழுமையாக தார்ப்பாய் கொண்டு கட்டப்பட்டுள்ளதா என்று சோதனை செய்து ஓட்டுனர்களுக்கு அறிவுரை வழங்கினர். விதிமுறைகளை மீறினால் லாரிகள் பறிமுதல் செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.

தொடர்புடைய செய்தி