இரு பிரிவினருடைய மோதல் போலீஸ் குவிப்பு

572பார்த்தது
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள உமையம்பட்டு மதுரா அம்மனூர் கிராமத்தை சேர்ந்த வாலிபர்களுக்கும் வண்ணந்தாங்கல் காலணி பகுதியை சார்ந்த வாலிபர்களுக்கும் இடையே ஏற்கனவே முன் விரோதம் இருந்தது. இது தொடர்பாக பெரியோர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் அம்மனூர் கிராமத்தை சேர்ந்த இரண்டு வாலிபர்களை வண்ணந்தாங்கல் பகுதியை சேர்ந்த வாலிபர்களை அசிங்கமாக பேசி கொலை மிரட்டல் விடுத்து அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அம்மனூர் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ஒன்று கூடி சண்டை இட்டதால் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து வேப்பங்குப்பம் போலீசருக்கு தகவல் கிடைத்தது போலீசார் விரைந்து சென்று அவர்களை சமரசம் பேசி அனுப்பி வைத்தனர். மேலும் பிரச்சினை தொடரக்கூடாது என பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு இரவு முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி