கர்நாடக மாநிலம் பெலகாவியை சேர்ந்த 28 வயது பெண், ரஃபிக் என்பவர் அவரது மனைவி கண் முன்னே தன்னை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த பெண்ணின் கணவர் வைத்துள்ள மளிகை கடைக்கு வந்தபோது ரஃபிக்கிற்கும் அவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனையறிந்த அப்பெண்ணின் கணவர் பிரிந்து சென்றுள்ளார். இதனையடுத்து ஒரே வீட்டில் ரஃபிக், அவரது மனைவி, இந்த பெண் மூவரும் தங்கியுள்ளனர். அப்போது மனைவி முன்பே அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் இஸ்லாம் மதத்திற்கு மாற வேண்டும் என வற்புறுத்தியதாக புகாரில் கூறியுள்ளார்.