காவிரிப்பாக்கத்தில் கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை!

50பார்த்தது
காவிரிப்பாக்கத்தில் கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை!
காவேரிப்பாக்கம் அடுத்த பாகவெளி கிராமம் பெரியதெருவை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 28). இவரது மனைவி சுஜிதா (24). இவர்களுக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந் தது. 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் சுஜிதா தற்போது 3-வது முறையான கர்பமாக உள்ளார். இதற்கிடையே தம்பதியருக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி சண்டை நடந்ததாக கூறப்படுகிறது. நேற்று மீண்டும் இவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனவருத்தத்தில் இருந்த 9 மாத கர்ப்பிணியான சுஜிதா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவேரிப்பாக்கம் போலீசார் சுஜிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால் சுஜிதாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் ராஜராஜன் விசாரணை நடத்தி வருகிறார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி