ராணிப்பேட்டையில் அழுகிய நிலையில் முதியவர் பிணம் கண்டெடுப்பு!

74பார்த்தது
ராணிப்பேட்டையில் அழுகிய நிலையில் முதியவர் பிணம் கண்டெடுப்பு!
ராணிப்பேட்டை சிப்காட் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட எமரால்டு பகுதியில் உள்ள வீட்டில் ஆண் பிணம் ஒன்று இருப் பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் போலீசார், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்த்தபோது 65 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் அழுகிய நிலையில் இருப் பது தெரியவந்தது. உடனடியாக உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிண மாக கிடந்த முதியவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி