சோளிங்கர் அருகே தண்ணீரில் தவறி விழுந்து குழந்தை பலி!

68பார்த்தது
சோளிங்கர் அருகே தண்ணீரில் தவறி விழுந்து குழந்தை பலி!
சோளிங்கர் தாலுகா போளிப்பாக்கம்- பாணாவரம் ரோட்டு தெருவில் வசிப்பவர் ரேவதி (வயது 27). இவரது கணவர் கார்த்திக். இவர்களுக்கு இரண்டு பெண்குழந்தைகள் உண்டு. கருத்து வேறுபாடு காரணமாக ரேவதி தன் பிள்ளைகளுடன் தாய் ஊரான போளிப்பாக்கத்தில் வசித்து வருகிறார்.

தனியார் கம்பெனியில் வேலை செய்துவரும் ரேவதி வழக்கம் போல கம்பெனிக்கு வேலைக்கு சென்றுவிட்டார். அப்போது வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த அவரது 12 வயது குழந்தை தேஜஸ்ரீ வாளியில் இருந்த தண்ணீரில் தவறி விழுந்து இறந்துள்ளது. விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை காணவில்லையே என பாட்டி தேடியபோது குழந்தை பக்கெட்டில் விழுந்து இறந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பின்னர் இது குறித்து பாணாவரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சென்று குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி