வேலூர் மாவட்டத்தில் நாளை மக்கள் குறைதீர்வு கூட்டம்!

75பார்த்தது
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையத்தால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடந்த மார்ச் 16ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது.

இதனால் அரசு நிகழ்ச்சிகள் மற்றும் மக்கள் குறைதீர் முகாம்கள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தேர்தல் ஆணையத்தால் ஜூன் 6-ம் தேதி தேர்தல் நடத்தை விதிமுறைகள் திரும்ப பெறப்பட்டுள்ளது.

ஆகவே வருகின்ற பத்தாம் தேதி திங்கள் கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீரும் முகாம் வழக்கம் போல் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி