மழையால் தடைபட போகும் இந்தியா பாகிஸ்தான் போட்டி.?

57பார்த்தது
மழையால் தடைபட போகும் இந்தியா பாகிஸ்தான் போட்டி.?
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டிக்கு மழை இடையூறு விளைவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூயார்க்கின் வானிலை குறித்து உள்ளூர் வானிலை நிறுவனம் அறிக்கை அளித்துள்ளது. அதில் காலை 07:00 மணி முதல் மழை பெய்யும் என்று கூறியுள்ளது. போட்டி தொடங்குவதற்கு முன்பு அல்லது போட்டி நடைபெறும் நேரத்திலோ மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளதால் இந்திய பாகிஸ்தான் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். போட்டியின் தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவிடம் தோல்வியடைந்த பாகிஸ்தான், இன்று இந்தியாவை வீழ்த்தினாலும் சூப்பர் 8 சுற்றுக்கான தகுதியை இழக்க நேரிடும்.