இந்தோனேசியாவில் மலைப்பாம்பு 45 வயது பெண்ணை உயிருடன் விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள கலேம்பாங் கிராமத்தைச் சேர்ந்த நான்கு குழந்தைகளின் தாயான ஃபரிதா, நேற்று முன்தினம் இரவு காணாமல் போன நிலையில், அவரது கணவர் மற்றும் உள்ளூர்வாசிகள் அவரை தேடி அலைந்தனர். இந்நிலையில், காட்டுப்பகுதியில் எதையோ சாப்பிட்டுவிட்டு நகரமுடியாமல் இருந்த 16 அடி மலைப்பாம்பின் உடலை சந்தேகத்தின் அடிப்படியில் வெட்டி பார்த்தபோது ஃபரிடாவின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.