கஞ்சா கடத்திய வாலிபர் கைது

601பார்த்தது
கஞ்சா கடத்திய வாலிபர் கைது
வேலூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக பல்வேறு இடங்களில் மது பாட்டில்கள் மற்றும் கள்ள சாராயம் காய்ச்சி பவர் விற்பவர் மற்றும் கடத்துபவர்களை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் அவர்கள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். இதன் அடிப்படையில் நேற்று வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் 78 மது பாட்டில்கள் மற்றும் காட்பாடி பகுதியில் 3 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் ஏழு மதுவிலக்கு வழக்குகள் மற்றும் ஒரு கஞ்சா வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது போன்ற குற்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடுபவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ் பி மணிவண்ணன் எச்சரித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி